கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கு முன்னாள் அமைச்சர் அமீர் அலி நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கு முன்னாள் அமைச்சர் அமீர் அலி நிதியுதவி

கொரோணா வைரஸ் தாக்கத்தினால் நாட்டின் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அன்றாடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை ஏற்பாடு செய்துள்ள நிவாரணம் வழங்குவதற்கு நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் புதல்வர் வைத்தியர் அப்தாப் அலி, தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை ஏ.ஜி.அமீர், முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், செயலாளர் தெளபீக், இணைப்பாளர்களான தெளபீக், கலந்தர், அஜ்வத் அலி நளீமி ஆகியோர் கலந்து கொண்டு குறித்த நிதியினைக் கையளித்தனர்.

ஜம்இய்யதுல் உலமா சபை சார்பாக தலைவர் இஸ்மாயில் மெளலவி, செயலாளர் இர்ஷாத் மெளலவி, மற்றும் அஷ்ரப் மெளலவி, இல்யாஸ் மெளலவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment