முஹம்மது அனீஸ்
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாக அன்றாடம் தமது வாழ்வாதாரமாக கூலித் தொழிலை நம்பி வாழ்க்கை நடாந்தும் ஏராளமான மக்கள் பாதிப்படைத்துள்ளனர்.
இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை தொழில் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குவதற்கான நிதி சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐந்து இலட்சம் ரூபாய் நிதி இன்று 24.03.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினரிடம் உத்தியோகபூர்வமாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் பிரதிநிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
ஏழை மக்களின் துயர் நீக்க துரித கதியில் நிதியுதவிகளை வழங்கிய முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு தமது நன்றிகளை உலமா சபையினர் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment