பொதுமக்களுக்கு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட சந்தர்ப்பம் - புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 10, 2020

பொதுமக்களுக்கு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட சந்தர்ப்பம் - புகைப்படம் எடுக்கவும் வாய்ப்பு

பழைய பாராளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை மார்ச் 14 சனிக்கிழமை முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதன்போது பார்வையிட வருபவர்கள் புகைப்படம் எடுக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) எனும் பெயருக்கு வேண்டுகோள் கடிதமொன்றை 011-2441685 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் ஊடாக அல்லது 011-2354354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பார்வையிடுவதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.

பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியானது இலங்கை அரசியல் வரலாற்றில் தீர்மானமிக்க யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பழைய கட்டிட நிர்மாண முறைமைகளில் ஐந்தில் ஒன்றான 'அயோனியானு முறைமைக்கு' ஏற்ப 82 ஆண்டுகளுக்கு முன் இது நிர்மாணிக்கப்பட்டது.

இதன் முன் தோற்றம் அதென்ஸ் நகரில் உள்ள எக்ரோபொலிஷ் மலையில் 'எனீதா' என்ற கிரேக்க தேவதைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதான தேவாலயமான 'பாதினன்' கட்டடத் தொகுதிக்கு ஒத்ததாக காணப்படுகின்றது

காலஞ் சென்ற ஹேபட் ஸ்டென்லி ஆளுநர் மூலம் 1930 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி அரசியலமைப்பு சபையாக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் சட்டத்துறையில் பின்னர் இடம்பெற்ற பெயர் மாற்றத்துடன், இது அரச மந்திரிகள் சபை (1931 -1947) உப மந்திரி சபை (1947 – 1972) தேசிய அரச சபை (1972 – 1978) மற்றும் இலங்கை பாராளுமன்றம் (1978 – 1982) எனும் பெயர்களின் மூலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு பாராளுமன்றம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இப்புராதன கட்டடம், 1983 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் பெயரிடப்பட்டது.

No comments:

Post a Comment