ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள், குர்ஆன் மதரசாக்களை மூடுமாறு தவிசாளர் அஸ்மி அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 12, 2020

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்கள், குர்ஆன் மதரசாக்களை மூடுமாறு தவிசாளர் அஸ்மி அறிவிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச சபை எல்லை பிரிவில் உள்ள அனைத்த தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் குர்ஆன் மதரசாக்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அறிவித்தல் விடுத்துள்ளார்.

உலகத்தையே ஆட்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது எமது நாட்டிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தினால் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ள நிலையில் எமது ஓட்டமாவடி பிரதேச சபை எல்லை பிரதேசத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் குர்ஆன் மதரசாக்களையும் நாளை 13.03.2020 வெள்ளிக்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை மீறி செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் குர்ஆன் மதரசாக்களுக்கு எதிராக சபையினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment