திறன் அபிவிருத்தி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சுக்கு உட்பட்ட அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் மூடப்படுகின்றன.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலகம் (SLBFE), இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை (VTA), இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (CGTTI), தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபை (NAITA), மற்றும் கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்துக்கு உட்பட்ட (DTET), ஆகிய நிறுவனங்களுக்கு உட்பட்ட அனைத்து தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் இன்று (14) முதல் இரு வாரத்திற்கு மூடப்படுகின்றன.
இந்த விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் அடிப்படையில் அமைச்சின் செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்தன அறிவித்திருப்பதாக அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment