ஊரடங்கை மீறி செயற்பட்ட 4,559 பேர் கைது - 1,125 வாகனங்கள் பறிமுதல் - News View

About Us

About Us

Breaking

Friday, March 27, 2020

ஊரடங்கை மீறி செயற்பட்ட 4,559 பேர் கைது - 1,125 வாகனங்கள் பறிமுதல்

கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று (27) மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4,559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,125 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) நண்பகல் 12.00 மணி முதல் இன்று மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்காலப் பகுதியில் 62 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

No comments:

Post a Comment