டில்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளிற்கு மார்ச் 20 ஆம் திகதி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்துள்ளதை தொடர்ந்து புதுடில்லி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய திகதியை அறிவிக்குமாறு கோரி இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூன்று முறை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு புதுடில்லியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தமை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கடும் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment