வாகன விபத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

வாகன விபத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் பலி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவில் திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலைக்குச் செல்லும் போது வாகரைப் பகுதியில் வைத்து உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளருமான எஸ்.ஏ.ரபீல் மரணமடைந்துள்ளதுடன், குறித்த விபத்தில் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் பழைய கல்முனை வீதி கல்லடியைச் சேர்ந்த கி.லக்ஸ்மன் (வயது 33) என்பவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment