வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் அழைப்பாணை விடுக்கப்பட்ட அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் அழைப்பாணை விடுக்கப்பட்ட அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுவிப்பு

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கொன்று தொடர்பில் முன்னிலையாகாமை காரணமாக அவருக்கு எதிராக நேற்றையதினம் (17) அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் (18) மனுவொன்றின் மூலம் தனது சட்டத்தரணி ஊடாக, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜரான அவருக்கு இவ்வாணை பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரை, ரூபா 7,500 கொண்ட மேலதிக பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இளவரசர் ஸைத் ராட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் அவர் உள்ளிட்ட பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விமல் வீரவங்சவும் இதில் உள்ளடங்குகின்றார்.

குறித்த வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நேற்று (17) இராஜாங்க அமைச்சர் ஜயந்தா சமரவீரவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment