கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் தொகை 304 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பாதிப்படைந்தோர் தொகை 14,550 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது உலகளாவிய ரீதியில் 27 நாடுகளில் பரவியுள்ளது.
1. சீனா : பாதிப்பு - 14,381, உயிரிழப்பு - 304
2. ஜப்பான் : பாதிப்பு - 20
3. தாய்லாந்து : பாதிப்பு - 19
4. சிங்கப்பூர் : பாதிப்பு - 18
5. ஹொங்கொங் : பாதிப்பு - 13
6. தென்கொரியா : பாதிப்பு - 12
7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 12
8. தாய்வான் : பாதிப்பு - 10
9. அமெரிக்கா : பாதிப்பு - 08
10. ஜேர்மனி : பாதிப்பு - 08
11. மலேசியா : பாதிப்பு - 08
12. மாக்கோ : பாதிப்பு - 07
13. வியட்நாம் : பாதிப்பு - 06
14. பிரான்ஸ் : பாதிப்பு - 06
15. டுபாய் : பாதிப்பு - 05
16. கனடா : பாதிப்பு - 04
17. இத்தாலி : பாதிப்பு - 02
18. ரஷ்யா : பாதிப்பு - 02
19. பிரிட்டன் : பாதிப்பு - 02
20. கம்போடியா : பாதிப்பு - 01
21. இந்தியா : பாதிப்பு - 01
22. பின்லாந்து : பாதிப்பு - 01
23. பிலிப்பைன்ஸ் : உயிரிழப்பு - 01
24. இலங்கை : பாதிப்பு - 01
25. நேபாள் : பாதிப்பு - 01
26. சுவீடன் : பாதிப்பு - 01
27. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவே முதன் முறையாக சீனாவுக்கு வெளியே இந்த வைரஸால் பாதிப்படைந்து ஒருவர் உயிரிழக்கும் சம்பவமாக பதிவாகியுள்ளது.
நேற்யை தினம் மேற்படி நபர் உயிரிழந்துள்ளதுடன், அவர் 44 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, பிலிப்பைன்சுக்கான உலக சுகாதார நிறுவன பிரதிநிதி ரபீந்திர அபேசிங்க தெரிவித்தார். இதனால் உயிரிழந்தோர் தொகை மொத்தமாக 305 ஆக உயர்வடைந்துள்ளது.
குறித்த நபர் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் இருந்து வந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் பிலிப்பைன்ஸிற்கு வரும் முன்பு வைரஸ் தொற்றியிருக்கலாம் என நம்பப்படுவதோடு, குறித்த நபர் காய்ச்சல், இருமல், தொண்டை நோவு ஆகிய அறிகுறிகளுடன் சேன் லஷாரோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த இருவரம் வூஹானைச் சேர்ந்தவர்கள் எனவும் முதலாவது நபரைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நபரும் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
இந்நிலையில், சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்தது. சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,430 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
புதிய கொரோனா வைரஸ் மேலும் 14,381 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
WHO Representative in the Philippines Dr Rabi Abeyasinghe said: This is the first reported case outside of China. However, we need to keep in mind that he came from Wuhan, China.
251 people are talking about this
No comments:
Post a Comment