கணவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் உயிரிழந்த சோகம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

கணவன் இறந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் உயிரிழந்த சோகம்

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது 72 என்ற ஐந்து பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பத்தில் குடும்பத் தலைவரான ஐயாத்துரை என்பவர் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் அவரது மனைவியான ஐயாத்துரை சரஸ்வதி என்பவருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தனது கணவன் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குறித்த குடும்பப் பெண் மயக்கம் அடைந்துள்ளார். 

மயக்கமடைந்து விழுந்த குறித்த குடும்பப் பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment