யாழ்ப்பாண நகரில் நீண்ட காலமாக துவிச்சக்கர வண்டிகளை திருடிச் சென்ற சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண நகர்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பலர் இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இதற்கமைய பொலிஸார் துவிச்சக்கர வண்டி திருடர்களை பிடிப்பதற்காக சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று துவிச்சக்கர வண்டிகளை திருடும் நபர் என சந்தேகிக்கப்படும் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து எட்டு பெண்களுக்கான துவிச்சக்கர வண்டியும், இரண்டு ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என மொத்தமாக 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment