ஷானி அபேசேகரவிடம் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2020

ஷானி அபேசேகரவிடம் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சுமார் 06 மணி நேரமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் கடத்தப்பட்ட சம்பவத்தின் விசாரணை தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று (23) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். 

இன்று முற்பகல் 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய ஷானி அபேசேகர, வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வௌியேறினார்.

அவர் 06 மணி நேரம் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment