(எம்.ஆர்.எம்.வஸீம்)
புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, அதற்கு தலைமைத்துவம் வழங்க தான் தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் அனைத்து முற்போக்கு சக்திகளையும் கூட்டிணைத்துக் கொண்டு புதிய கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை வெற்றி பெறுவோம். அதற்காக கிராம மட்டத்தில் இருக்கும் நீங்கள் சக்தி பெற வேண்டும்.
பொதுத் தேர்தலுக்கு புதிய மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்த நாங்கள் தயார். அதற்காக யாரையும் ஒதுக்கமாட்டோம். அனைவரையும் இணைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.
புதிய கூட்டணிக்கு தலைமைதாங்க நான் தயார். ஒற்றுமையே எமக்கு பலம். அந்த ஒற்றுமை பெயரளவில் இருக்க முடியாது. அதேபோன்று எமது எதிர்த்தரப்புடன் டீல் போட்டுக் கொண்டு செயற்படுபவர்களுடன் இந்த பயணத்தை செல்ல முடியாது. டீல் அரசியல் கட்சிக்கும் நல்லதில்லை, நாட்டுக்கும் நல்லதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு இன்று கொழும்பு கண்காட்சி பண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டடார்.
No comments:
Post a Comment