கடந்த அரசின் முதலீட்டு நடவடிக்கைகளின் முறைகேடுகள் பத்து நாட்களுக்குள் அம்பலப்படுத்தப்படும் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, December 4, 2019

demo-image

கடந்த அரசின் முதலீட்டு நடவடிக்கைகளின் முறைகேடுகள் பத்து நாட்களுக்குள் அம்பலப்படுத்தப்படும்

cfad65ba878a8d58bf4600235faf5023_XL
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் பத்து நாட்களுக்குள் விபரங்கள் அம்பலப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

டயர் கம்பனி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவை உட்பட பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரு முன்னரே தமக்கான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேரம் பேசிய யுகத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். 

கொழும்பில் (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 2005 இல் நாம் அரசாங்கத்தை ஆட்சி செய்தபோது வரி வருமானம் ஒரு டிரில்லியன் ஆகவே இருந்தது. கடந்த அரசாங்கம் அதனை 2.5 டிரில்லியனாக அதிகரித்தது. அதனால்தான் நாட்டு மக்கள் பெரும் சுமையை எதிர்நோக்க நேர்ந்தது. 

நாம் எமது ஆட்சிக்காலத்தில் ஒரு டிரில்லியன் வரி அறவிட்டு மக்களுக்கு சுமை ஏற்படாத வகையில் நிவாரணங்களையும் வழங்கினோம். எனினும் கடந்த அரசாங்கம் 2.5 டிரில்லியன் வரி அறவிட்டு மக்களுக்கு பெரும் சுமையை வழங்கியுள்ளது. அந்த இரண்டு டிரில்லியனில் 50 மில்லியனை நாம் வரிக்குறைப்பு செய்தாலும் 1.5 டிரில்லியனை வரி வருமானமாகப் பெற்று நாட்டை எம்மால் நிருவகிக்க முடியும். 

அதேவேளை 2005 இல் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்கையில் முழு தேசிய உற்பத்தி வருமானம் 20 பில்லியன் டொலராக இருந்தது.

அதனை எமக்கு 10 வருடங்களுக்கு தொடர முடிந்தது. எவ்வாறாயினும் நட்டமீட்டும் நிறுவனங்களை இலாப மீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடிந்தால் நாட்டின் பொருளாதாரத்தை சுமுகமாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *