சபாநாயகருக்கு எதிராக அரசியல் ரீதியில் திட்டமிட்ட செயற்பாடுகள் : சபாநாயகர் அலுவலகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

சபாநாயகருக்கு எதிராக அரசியல் ரீதியில் திட்டமிட்ட செயற்பாடுகள் : சபாநாயகர் அலுவலகம்

பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழுத்தம் பிரயோகித்தார் என்று உள்ளுர் மடடத்தில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது. சபாநாயகருக்கு எதிராக தற்போது அரசியல் ரீதியில் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சபாநாயகர் வரவழைத்து அழுத்தம் பிரயோகித்ததாக நிரூபிக்கப்படாத செய்திகள் வெளியிடப்பட்டன.

எச்சந்தர்ப்பத்திலும் பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளையோ, அல்லது ஆணைக்குழுவின் உறுப்பினர்களையோ சபாநாயர் சந்தித்து அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இவ்விடயம் பொலிஸ் ஆணைக்குழுவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலியான வித்திலும், குறுகிய அரசியல் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு தற்போது சபாநாயகருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பி விடப்படுகின்றன.

ஜனநாயகத்திற்கு எந்நிலையிலும் எதிராக செயற்படவில்லை என்பதை சபாநாயகர் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் ஊடாக நிரூபித்துள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசியலமைப்பின் 17வது திருத்தத்தின் ஊடாகவும், 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தும் சபாநாயகர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

பொலிஸ் ஆணைக்குழு உட்பட சுயாதீ ன ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு கலங்கம் ஏற்படும் செயற்பாடுகளுக்கு சபாநாயகர் ஒருபோதும் இடமளிக்கவில்லையென சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment