நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை - நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை - நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு இடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

No comments:

Post a Comment