முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க வெளிநாடு செல்ல தடை - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க வெளிநாடு செல்ல தடை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மற்றும் அவரது சாரதியான துசித குமார ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்று தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று (13) இத்தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கருத்தில் கொண்டு நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

குறித்த உத்தரவு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இது குறித்து அறிவிக்குமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment