வடக்கு ரயில் பாதை சீர்செய்யப்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று (29) காலை நேர அட்டவணைப்படி புகையிரத சேவை இடம்பெற்றுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
கல்கமுவ மற்றும் அம்பன்பொல புகையிரத நிலையங்களுக்கு இடையில் யாழ்தேவி புகையிரதம் நேற்றுமுன்தினம் (27) தடம்புரண்டது. இதன் காரணமாக வடக்கு நோக்கிய புகையிரத போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று காலை கொழும்பிலிருந்து புகையிரதம் புறப்பட்டு குறித்த இடத்தை நெருங்கும்போது பராமரிப்பு பணிகள் நிறைவடைந்திருக்குமென அறிவித்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment