சன்மார்க்க பணிகளில் முக்கிய பதவி வகித்து வந்தவரான ரபீக் ஹாஜியார் காலமாகியுள்ளார்.
இவரினது ஜனாசா நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் கண்டி அணிவத்தை வீட்டிலிருந்து, எடுத்துச் செல்லபட்டு, மக்கள் பார்வைக்காக கண்டி, கட்டுக்கலை ஜும்மா பள்ளிவாசல் மஸ்ஜிதில் வைக்கப்பட்டு, காலை 10.00 மணியளவில் தொழுவிக்கப்பட்டு, கட்டுகலை ஜும்மா மஸ்ஜித் மையயவாடியில், நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கையின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு மிக நவீனமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மேற்படி ரபீக் ஹாஜியார் குடும்பம் சுமார் 203 பேர்ச் காணியை கடந்த வாரம் அன்பளிப்பு செய்திருந்தனர்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment