அக்கரைப்பற்று - கண்ணகிபுரம் மலையடிவாரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் சட்ட மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அக்கரைப்பற்று - சின்னபனங்காடு, புளியம்பத்தை பகுதியை சேர்ந்த 29 வயதான விநாயகமூர்த்தி தேவரூபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களாக அவர் காணாமற்போயிருந்த நிலையில், இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment