கொழும்பிலுள்ள பாடசாலைகள் திங்களன்று பூட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

கொழும்பிலுள்ள பாடசாலைகள் திங்களன்று பூட்டு

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (07) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு அன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை, கொழும்பு கல்வி வலயத்திலுள்ள கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பிரிவுகளிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திலுள்ள ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, ஹேவாவிதாரண மகா வித்தியாலயம், ஹேவாவிதாரண மாதிரி ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment