மர்ஹும் மசூர் மௌலானா (Grand Masters) கிண்ணத்தை (OBA) 70 அணியினர் கைப்பற்றினர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 18, 2019

மர்ஹும் மசூர் மௌலானா (Grand Masters) கிண்ணத்தை (OBA) 70 அணியினர் கைப்பற்றினர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு சாஹிராவின் பழைய மாணவர்களினால் (OBA) ஏற்பாடு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி (15) கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜாவிட் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

போட்டியில் முன்னாள் செனட்டர் எஸ்.இஸட்.எம். மர்ஹும் மசூர் மௌலானா ஞாபகார்த்த (Grand Masters) சவால் கிண்ணத்தை (OBA) 70 அணியினர் தனதாக்கிக் கொண்டனர். அத்தோடு, பெறோஸ் இன்ஹாம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை 2009 அணியினர் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார், ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீட், அக்ரம் மௌலானா, சியாம் மௌலானா, இல்ஹாம் மௌலானா, நௌஷாத் மௌலானா, ஷப்கி முஹம்மட், முஹம்மட் ஷஹ்ரப் ஆகியோர் இணைந்து வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்குவதைப் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment