கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய முஹமட் முபாரக் முஹமட் அசாமின் சடலத்தை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபரின் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுப்பு தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த சடலத்தை திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு, கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சடலத்தை பொரளை மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்குமாறு, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொரளை பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகரிடம் குறித்த நடவடிக்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment