அரச விருது வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலைஞர்கள் புறக்கணிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

அரச விருது வழங்கும் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலைஞர்கள் புறக்கணிப்பு

இந்து கலாசாரத் திணைக்களத்தினால் முதன் முதலாக கலைஞர்களை ஊக்கவிக்கும் வகையில் கலைஞர்களுக்கான அரச விருது வழங்க எடுத்த முயற்சியை திருக்கோவில் பிரதேச கலைஞர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிதுள்ளனர். 

அரச விருது வழங்கும் முதல் நிகழ்வில் பாரம்பரியமாக கலைகளின் வரலாற்றுப் பிரதேசமான திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து எந்தவொரு கலைஞர்களும் தெரிவு செய்யப்படாமை குறித்து மூத்த கலைஞர்கள் தங்களது மன வேதனையும் விசனத்தையும் தெரிவித்துள்ளனர். 

இவ்அரச விருதுக்கு கலைஞர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக முறையாக விண்ணப்பித்து இருந்தனர். 

திருக்கோவில் பிரதேசம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக கலைத்துறைக்காக அர்ப்பணித்து வரும் மூத்த கலைஞர்கள் உட்பட இளைய கலைஞர்கள் யாரும் அரச விருதுக்கு தெரிவு செய்யப்படாமை விசனத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

கலைஞர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள் என தங்களுக்கு தெளிவு இல்லாது இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் தெரிவு பிரதேச ரீதியாக தெரிவு செய்யப்படாமை தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோரின் கவனத்திற்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்போவதாகவும் திருக்கோவில் பிரதேச கலைஞர்கள் உட்பட அம்பாறை மாவட்ட மூத்த கலைஞர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். 

(திருக்கோவில் நிருபர்)

No comments:

Post a Comment