அடிப்படைவாதத்துக்கும், இனவாதத்துக்கும் சுதந்திரக் கட்சியில் இடம் கிடையாது - எமது தீர்ப்பு ரணிலோ, சஜித்தோ அல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

அடிப்படைவாதத்துக்கும், இனவாதத்துக்கும் சுதந்திரக் கட்சியில் இடம் கிடையாது - எமது தீர்ப்பு ரணிலோ, சஜித்தோ அல்ல

அடிப்படைவாதத்துக்கும், இனவாதத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இடம் கிடையாது. அதுவே எமது கட்சியின் பலமாகுமென கட்சியின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார். 

எதிர்காலத்தில் எமது தீர்ப்பு ரணிலோ அல்லது சஜித்தோ அல்ல. நாட்டின் தேசிய தேவையை நிறைவேற்றுவதற்கு நாம் சரியான தீர்மானத்தை எடுப்போம். 

ஐ.தே.கவுடன் அரசாங்கம் செய்ய முடியுமானால் ஏன் எம்முடன் நெருக்கமாக உள்ளவர்களுடன் நாம் இணைந்து அரசு அமைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். 

தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவாதக் கட்சியல்ல. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, தங்கராஜா, மரிக்கார், பதியுத்தீன் போன்றவர்களை இணைத்துக் கொண்டே கட்சியை ஆரம்பித்து நடத்தினார். 

கட்சியானது 68 வருடங்கள் மலர் பாதையிலன்றி முட்பாதையிலேயே பயணித்து வந்துள்ளது. கட்சிக்குள்ளேயே கட்சிக்கு எதிரான செயற்பாடுகள் பெருமளவில் நிகழ்ந்துள்ளன. எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கவை படுகொலை செய்து கட்சியை இல்லாதொழிக்க எண்ணியவர்கள் தோல்வி கண்டனர். 

பல்வேறு காலகட்டங்களிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ஆகிய தலைவர்களினால் கட்சி சிறப்பாக வழி நடத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டது. 

தற்போது கட்சி மேலும் பலம் பெற்றுள்ளது. கட்சிக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் ஆயிரக்கணக்கான கேள்விகளை நான் பாராளுமன்றத்தில் எழுப்பியுள்ளேன். அதற்கு சரியாக பதில் கிடைக்கில்லை.

ஐ.தே.கட்சியின் கொள்கை எமக்கு சரிவராது. அதனாலேயே தேசிய அரசிலிருந்து வெளியேறினோம். 19ஆவது அரசியல் திருத்தத்துக்கு நாம் ஆதரவளித்தால் இருபதாவது திருத்தத்தைக் கொண்டுவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாலேயே நாம் அதற்கு வாக்களித்தோம். ஆனாலும் அவர் எம்மை ஏமாற்றிவிட்டார் என்றார். 

லோரன்ஸ் செல்வநாயம்

No comments:

Post a Comment