சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஸ - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஸ

நாம் தேர்தலில் தோல்வியடைந்தாலும் மக்களின் வாக்குகளை வெற்றி கொண்டுள்ளதாக எமக்கு அறியப்படுத்தியது பெண்கள் தான். தற்போதைய அரசாங்கம் பெண்களை புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் இந்த ஆட்சி வீழ்ச்சியடைந்துள்ளது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் முன்னணியின் முதலாவது மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.

கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையுடன் கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் பொதுஜன பெரமுனவில் முதலாவது மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாறறும்போதே மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார். அவர் இம்மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது,

பெண்களை ஏமாற்றுவது சிறந்தது அல்ல. பெண்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினால் அதுதான் அவரின் இறுதிக்காலம். இது உங்களுக்கு புரிந்ததா ? அரசாங்கம் பொய் வாக்குறுதி வழங்கினால் அரசாங்கத்திற்கு இந்த நிலைமையே ஏற்படும். 

எமது நாட்டு பெண்களுக்கு இடமளிக்கும் கட்சியொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். இப்போது இந்த கட்சியில் அதிகம் பணிபுரிவது யார்? பெண்களே அதிகளவில் காணப்படுகின்றனர். நான் சென்று பார்த்த போது பசில் உடன் பெண்களே சூழ்ந்திருந்தனர். நேரடியாக கூறுவதாக இருந்தால் சிறந்த மனைவி இருக்கும் ஒருவருக்கே நாட்டை வழங்க வேண்டும் என்றார்.

இம்மாநாட்டில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment