வாகன விபத்தில் 22 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2019

வாகன விபத்தில் 22 பேர் காயம்

சீகிரியா, தம்புள்ளை - ஹபரண வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை - ஹபரண வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் இன்று (23) காலை 6.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும், எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தின்போது, குறித்த பஸ் வண்டி குடைசாய்ந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் குறித்த பஸ் மற்றும் வான் சாரதிகள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பாக சீகிரியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment