நாவிதன்வெளி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

நாவிதன்வெளி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டன

அம்பாறை மாவட்டம், சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளன.

இன்றையதினம் (31) விசேட தகவல் ஒன்றினை அடுத்து அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர்.

குறித்த கைக்குண்டுகள் யாவும் குறித்த வாவியோரம் பொலித்தீன் பை ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இக்குண்டுகளை சிறுவர்கள் என்னவென்று அறியாமல் எடுத்து விளையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கிராமவாசி மற்றும் பொதுமக்கள் இணைந்து சவளக்கடை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிசார், இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன் இராணுவத்தின் வெடி குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குறித்த கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment