எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழியங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சேகர் கலந்து கொண்டார்.
இதன் போது மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால நடவடிக்கைகள், அவசியமாகத் தேவைப்படும் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்பொழுது தற்காலிகமாக மாஞ்சோலைக் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் அலுவலகம் இயங்கி வருகின்றன. எனவே, நீங்கள் உங்களது உரிமைகளை இவ்வமைப்பினூடாகப் பெற்றுக் கொள்ளலாமென சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சேகர் தெரிவித்தர்.
எதிர்வருகின்ற ஒக்டோபர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான தினத்தினை மிகச்சிறப்பாகக் கொண்டாட அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டும் வருவதாக அமைப்பின் தலைவர் எஸ்.ஐ.தௌபீக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment