போதையிலிருந்த 6,479 சாரதிகள் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

போதையிலிருந்த 6,479 சாரதிகள் கைது

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த 05 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மது போதையிலிருந்த 6,479 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, நேற்று (30) காலை 6.00 மணி முதல் இன்று (31) மாலை 6.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் மது போதையிலிருந்த 164 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment