ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 31 பேர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய 36 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பெண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு பாரிய தொகைப் பணம் கிடைத்த விதம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் பலர் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாகவும் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment