யாழில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

யாழில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

பாறுக் ஷிஹான்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (1) மதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் இருந்து வந்த சிலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் நிலையில் இப்போராட்டம் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment