சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பொகவந்தலாவை, மாவெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பேர் இன்று (30) பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

பொகவந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களையே கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்

அத்தோடு, கைது செய்யபட்ட 3 பேரும் பொகவந்தலாவை பொலிஸாரினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 04 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொகவந்தலாவை பொலிஸாரினால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நோட்டன் பிரிஜ் நிருபர்

No comments:

Post a Comment