வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் வேம்படி சந்தியில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான பிரசாத் என்பவரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபரான பிரசாத் என்பவர் யாழ்.வேம்படி சந்தி, மத்திய கல்லூரிக்கும் வேம்படி மகளீர் கல்லூரியையும் இணைக்கும் சந்தியில் உள்ள வீடொன்றில் இந்த வின்ஸ்ரார் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்துள்ளார். மோசடியினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் பிரகாரம், இன்றும் (02) நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், வின்ஸ்ரார் தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

யாழ். நிருபர் சுமித்தி

No comments:

Post a Comment