மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தாலும் குறைசொல்லும் அரசியல்வாதிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

மரத்தில் இருந்து தேங்காய் விழுந்தாலும் குறைசொல்லும் அரசியல்வாதிகள்

தேங்காய் மரத்தில் இருந்து தேங்காய் கீழே விழுந்தாலும் விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஆகவே யார் எதை கூறினாலும் இன்று நள்ளிரவோடு மின்சாரம் தடை செய்யப்படாது என மின்சக்தி, எரிசக்தி, சக்தி வலு அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

மஸ்கெலியா மவுசாகலை சமன் ஆலயத்திற்கு இன்று (10) வருகை தந்த அமைச்சர் விஷேட வழிபாடுகளிலும் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக மின்சாரத்திற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சீரான மின்சாரத்தை நாங்கள் மக்களுக்கு வழங்கி வருவதோடு, எக்காரணத்தை கொண்டும் மின்சாரம் தடை செய்யபடாது எனவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை, மலையகத்தில் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டனி ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது இவ்வாறு இருக்கும் பொழுது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியோடு இணையப்போவதாக வெளியாகி இருக்கும் தகவல் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அமைச்சர் அப்படி ஒன்று இல்லை. இதனை அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானிடம் தான் கேட்க வேண்டும். 

மலையகத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இது இவ்வாறு இருக்க ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ 600 வீடுகளை வழங்க போவதாக மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமான் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த அமைச்சர், மலையகத்தில் இன்று 10.000 ஆயிரத்திற்கு மேல் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் பல வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆகையால் நாங்கள் மலையகத்தில் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் பழனி திகாம்பரம் தான் முன்னெடுப்பார் என அவர் குறிப்பிட்டார். 

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment