கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த 1070 வீடுகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டில் பெய்த கடும் மழையின் காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்தமை மற்றும் மழை நீர் முறையாக வழிந்தோடாமை போன்ற நிலைமையின் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.
இந்த வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்த சில வீடுகள் மற்றும் சொத்துக்களுக்காக தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தினால் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டில் உள்வாங்கப்படாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மேலும் பல வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் மதிபீட்டு அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 1070 வீடுகளுக்கு நஷ்டஈடு செலுத்துவதற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரச நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment