இலங்கைப் பிரஜைகள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு மார்ச் முதல் இதுவரை 36,995 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படு மென்றும் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், வெளிநாடுகளில் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ள நபர்களுக்கு மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கிட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment