சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (05.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்திற்கான மாற்று பாடசாலை தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுனரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment