லாகூர், அட்டாரி நகரங்கள் இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம் - பாகிஸ்தான் திடீர் முடிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

லாகூர், அட்டாரி நகரங்கள் இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம் - பாகிஸ்தான் திடீர் முடிவு

பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதை கருத்தில் கொண்டு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக இந்தியா, பாகிஸ்தான் இடையே 1976ம் ஆண்டு முதல் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும், இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் இடையே ஆரம்பத்தில் தினந்தோறும் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து, பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது.

மேலும், 1994ம் ஆண்டு முதல், வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இப்போது எல்லையில் போர் பதற்றம் நிலவி வருவதால், இந்த ரயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தி வைப்பது என திடீரென முடிவு எடுத்தது.

இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதை கருத்தில் கொண்டு, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு மேம்படும்போது, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கும்” என கூறப்பட்டுள்ளது.

புலவாமா தாக்குதலுக்கு பின்னர் இந்த ரயிலில் கூட்டம் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. லாகூரில் இருந்து நேற்று வெறும் 16 பயணிகளுடன் புறப்படவிருந்த நிலையில்தான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment