சீன அரசின் நிதி உதவியுடன் நாடு பூராகவும் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடங்களின் முதல் நிகழ்வு ஏறாவூரில் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 9, 2019

சீன அரசின் நிதி உதவியுடன் நாடு பூராகவும் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலை கட்டடங்களின் முதல் நிகழ்வு ஏறாவூரில்

சீன அரசின் 6000 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் நாடு பூராகவும் நிர்மாணிக்கப்படவுள்ள 13 வைத்தியசாலை கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வுகளின் முதலாவது நிகழ்வு இன்று ஏறாவூரில் இருந்து ஆரம்பமாகின்றது.

இத்திட்டத்தின் கீழ் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் 234 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் இன்று காலை 9 மணிக்கு நடப்படவுள்ளது.

இந்தக் கட்டடம் நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திர சிகிச்சை கூடம் மற்றும் ஆரம்ப சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment