நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட நீதிமன்றம் தடை - News View

About Us

About Us

Breaking

Friday, January 4, 2019

நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட நீதிமன்றம் தடை

முக்கிய பிரமுகர்கள் கொலை சதித்திட்டம் சம்பந்தமாக ஊழல் எதிர்ப்பு படையணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. 

நாமல் குமார கொலைச் சதிதிட்டம் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வௌியிட்டுக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் இடம்பெற்றதாக குரல் பதிவொன்றை வெளியிட்டு நாமல் குமார பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவை கைது செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment