ரூபா 3.6 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கணவன் மனைவி கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

ரூபா 3.6 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கணவன் மனைவி கைது

கிரிபத்கொடை, ஈரியவெட்டியவில், ரூபா 3.6 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (30) பிற்பகல் தீவிரவாத விசாரணை பிரிவு (TID) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிரிபத்கொட, ஈரியவெட்டிய வீதியில்100 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டியில் சென்ற கணவன் (34), மனைவி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்களது வீட்டை சோதனையிட்ட போது அங்கு 3 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டதோடு, அவை 3 பொதிகளில் பொது இடைப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த ஹெரோயினின் பெறுமதி சுமார் ரூபா 3.6 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment