மட்டக்களப்பு, வவுணதீவில் இரு பொலிஸாரை சுட்டுப் படுகொலை செய்தமையை வன்மையாக கண்டித்து, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (03) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நாட்டின் இன ஒற்றுமைக்கும், சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம். நாம் அமைதியாக வாழ விரும்புகின்றோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை முன்வைத்தனர்.
இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பினால் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக முன்னெடுத்ததுடன், அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பேரணியாக தம்பிலுவில் வரை சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் சமாதான சூழலை சீர்குலைக்காதே, படுகொலைகள் வேண்டாம், பொலிஸாரின் படுகொலையைக் கண்டிக்கின்றோம் போன்ற சுலோக அட்டைகள், பதாகைகள் என்பன ஏந்தி தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளிக்காட்டினர்.
No comments:
Post a Comment