நிறைவேற்று அதிகாரத்துடன் ஜனாதிபதி செயற்பட எவ்வித தடையும் இல்லை - சுசில்பிரேம் ஜெயந்த் - News View

About Us

About Us

Breaking

Monday, December 3, 2018

நிறைவேற்று அதிகாரத்துடன் ஜனாதிபதி செயற்பட எவ்வித தடையும் இல்லை - சுசில்பிரேம் ஜெயந்த்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிறைவேற்று ஜனாதிபதியாக செயற்பட எந்த தடையும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில்பிரேம் ஜெயந்த நேற்று தெரிவித்தார். ஜனாதிபதி சட்ட ஆலோசனையின் பிரகாரம் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு பொருந்தும் வகையிலே மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேன்முறையிட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை நீதிபதிகள் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த சந்திப்பு ஏற்கெனவே ஒழுங்கு செய்யப்பட்டது. இது மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான சந்திப்பு அல்ல என்று குறிப்பிட்டார்.

காலியில் நடைபெற்ற கூட்டத்தில் மேன்முறையீட்டு தீர்ப்பு தொடர்பாக முன்கூட்டியே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருப்பது பற்றி எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹப்பெரும, இதற்கு முன்னரும் அவர் இவ்வாறு முன்கூட்டி தீர்ப்பு பற்றி கூறியிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கமொன்று இல்லாத ஒரே சந்தர்ப்பம் இதுதான் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment