கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப்பேரவை இணைந்து நடாத்திய பிரதேச இலக்கிய விழாவில் மூன்றாவது முறையும் ஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும் கிடைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச கலாசார பேரவைத்தலைவரும் பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன் தலைமையில் பேத்தாழை குகனேசன் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஏ.ஜெயரஞ்ஜித், திருமதி.ஸோபா ஜெயரஞ்ஜித், ஜெ.அம்றிதா, ஜெ.அத்விஹா ஆகிய நால்வருக்கும் எழுத்துத்துறைக்கான கலைஞர் கௌரவமும், கட்டுரை, பாடல் நயத்தல், பாடலாக்கம், நாட்டார்கலை கற்றல் போட்டிகளுக்காக ஏழு வெற்றிப் பாராட்டுப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment