மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத், மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.அஜ்மீர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் உட்பட கல்வி அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது, 2016ம், 2017ம் ஆண்டுகளில் வகுப்பு ரீதியாக இறுதி தவணைப்பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை பெற்ற மாணவர்கள்ää அதிகூடிய வரவுள்ள மாணவர்கள், பாடங்களில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு, 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை சாதாரண தரப்பரீட்சையில் அதிதிறமைச் சித்தி பெற்ற மாணவர்கள், 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், 2010ம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரை கல்விக்கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் ஆகியோருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment