வவுணதீவில் இரு பொலிஸார் கொலை - பின்னனியில் கருணாவா? விசாரணை வேண்டும் என்கின்றார் நளின் பண்டார - News View

About Us

Add+Banner

Friday, November 30, 2018

demo-image

வவுணதீவில் இரு பொலிஸார் கொலை - பின்னனியில் கருணாவா? விசாரணை வேண்டும் என்கின்றார் நளின் பண்டார

nalin
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இந்நேரத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மன்) இன் டிவிட்டர் பதிவு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். 

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். 

வவுணதீவு, வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில் நேற்று இரவு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். 

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் நான் மட்டக்களப்பில் இருந்து கருணா அம்மன், 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் தான் யார் என்று விசாரித்து பார்க்குமாறும் கருணா அம்மன் தனது டிவிட்டரில் அண்மையில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். 

இந்த பதிவிக் காரணமாக 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த கருணா அம்மன் மீண்டும் வரப்போவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

அத்துடன் கருணாவின் இவ்வாறான நடவடிக்கைகளுடன் ஒப்பிடும் போது பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
47196442_306936586814338_2207322210404663296_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *