இரண்டு தரப்புக்கும் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் இணக்கப்பாட்டு அரசு உருவாக்கப்பட வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

இரண்டு தரப்புக்கும் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் இணக்கப்பாட்டு அரசு உருவாக்கப்பட வேண்டும் - அத்துரலிய ரத்ன தேரர்

குறுகிய காலத்துக்குள் இரண்டு தரப்புக்கும் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் இணக்கப்பாட்டு அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று, நான்கு மாதங்களுக்கு சகலரும் இணைந்து என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற கொள்கை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும் அதிகாரங்களுடன் தேர்த லுக்குச் செல்வதற்கான நிலைமை ஏற்படுத்த ப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிரதமருடைய செயலாளரின் செலவீனங்களை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அத்துரலிய ரதன தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவது, சிங்கப்பூர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை போன்ற சந்தர்ப்பங்களில் அவற்றைத் தடுப்பதற்கு ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவிறியுள்ளார் என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றேன். 

தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள குழப்ப சூழ்நிலைக்குத் தீர்வுகாண சகலரும் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்து குறுகிய காலத்துக்குள் எதனைச் செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது என்பது தொடர்பில் பொதுவான கொள்கையொன்றைத் தயாரிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இரண்டு தரப்புக்கும் அதிகாரங்கள் செல்லும் வகையில் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும்.அதேநேரம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்புக்கு ஆட்சியமைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment