ஜோர்ஜியாவில் முதலாவது பெண் ஜனாதிபதியாக சலோம் சுரபிஷ்விலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் பிரான்ஸில் பிறந்த முன்னாள் இராஜதந்திரியான சுரபிஷ்விலி 59 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு எதிர்த்து போட்டியிட்ட கிரிகோல் விஷாட்ஸ் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.
சுரபிஷ்விலிக்கு ஆளும் ஜோர்ஜியன் டிரீம் கட்சி ஆதரவு அளித்ததோடு விஷாட் ஐக்கிய எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்டார். எனினும் அமுலுக்கு வந்திருக்கும் புதிய அரசியலமைப்பின்படி ஜனாதிபதியின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
66 வயதான சுரபிஷ்விலி பாரிஸில் பிறந்தவராவார். அவரது பெற்றோர் 1921 ஆம் ஆண்டு சோவியட் ஒன்றியம் ஜேர்ஜியாவை இணைத்துக் கொண்டதை அடுத்து அங்கிருந்து வெளியேறியவர்களாவர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் இணைவதற்கு ஜோர்ஜியா விண்ணப்பித்திருக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இந்த தேர்தலை அவதானித்து வருகின்றன.
No comments:
Post a Comment